
திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கொடியாலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணபதி மகன் மதிர் விஷ்ணு என்ற விஷ்ணு (18). ஆட்டோ ஓட்டுநரான இவர், கொடியாலத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நேற்று அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
கொடியாலம் ரயில்வே கேட்டை கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த 5 பேரில் ஒருவர், பேருந்தில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளிவிட்டார். சாலையில் விழுந்த விஷ்ணுவை, அக்கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த விஷ்ணுவை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FjHT7wh
0 Comments