
குஜராத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக மிரட்டி, ரூ.1 கோடியே 15 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஒரு வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சிபிஐ அதிகாரி என்றும், முதியவரின் பெயரில் 400 கிராம் போதைப் பொருள் பார்சல் மும்பையில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவரது வங்கி கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறி அவரையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார். விசாரணைக்காக அந்த முதியவரை 15 நாள் டிஜிட்டல் கைதில் வைத்திருப்பதாக கூறி அவரது வங்கி பரிவர்த்தனை விவரங்களை போலி சிபிஐ அதிகாரி கேட்டுள்ளார். இதனால் மிரண்டுபோன முதியவர், தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடிய 15 லட்சத்தை போலி சிபிஐ அதிகாரி கூறிய வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/neTdugp
0 Comments