Crime

சபரிமலை: ஐயப்ப பக்தர்களை ஏற்றுவதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றி முழுவதும் கருகியது. பேருந்தில் பக்தர்கள் இதில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக வெள்ளிக்கிழமை (நவ.15) மாலை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படும். பின்பு அங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் மூலம் 20 கிமீ. தூரம் உள்ள பம்பைக்கு செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vRAydw9

Post a Comment

0 Comments