Crime

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூரில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் லிங்கேஷ் (24),சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ் (22), கேசவன் (22). நண்பர்களான ஐந்து பேரும் வெவ்வேறு வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்கள். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று (அக்.31) மாலை கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் ஒரு பைக்கிலும், இரண்டு பேர் ஒரு பைக்கிலும் ஏறிச்சென்றனர். அதி வேகமாக செல்வது, திடீரென பிரேக் பிடிப்பது, முன் வீலை தூக்கியபடி செல்வது உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qPcWSke

Post a Comment

0 Comments