
சென்னை: ‘ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால், உங்கள் கணினி முடக்கப்பட்டது’ எனக் கூறி நூதன முறையில் மோசடிக் கும்பல் பணம் பறித்து வருகிறது. இதில், உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை வழங்கி உள்ளனர். பொது மக்களின் ஆசை அல்லது பய உணர்வை தூண்டி, சைபர் க்ரைம் மோசடி கும்பல், வெளிநாடுகளில் இருந்தவாறு பணம் பறித்து வருகின்றன. இதில், பணத்தை இழந்துவிடாமல் விழிப்புடன் இருக்க போலீஸார் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.
இது குறித்து தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி-யான சந்தீப் மித்தல் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘உங்கள் கணினி (கம்ப்யூட்டர்) முடக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், இதை அழுத்தவும் என ஆப்ஷன் வரும். நீங்கள் அதை அழுத்திய உடன், நீங்கள் சில ஆபாச இணையதளங்களை பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தியோடு, இதனால் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KUR6eoL
0 Comments