
ராமேசுவரம்: இலங்கையில் ஆன்லைன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு வாரங்களில் 200 சீனர்களை அந்நாட்டு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் வெளிநாட்டைச் சேர்ந்த மர்ம கும்பல்கள் ஆன்லைன் மூலமாக பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் ரகசிய விசாணைகளை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த மோசடி கும்பல்கள் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக ஆட்களை சேர்த்து அதிக லாபம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து முதலீடு செய்ய வைத்ததும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தியும் பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oE4LxCI
0 Comments