Crime

சென்னை: மனைவி இறந்த சோகத்தில், பிள்ளைகள் இருவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு டெய்லர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் காலடிப் பேட்டை, ஜானகி அம்மாள் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அருள் (47). இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணி செய்து வந்தார். இவருக்கு அம்சா (45) என்ற மனைவியும், கல்லூரி 2-ம் ஆண்டு படித்த மகள்ரம்யா (18), 9-ம் வகுப்பு படித்தராஜேஷ் (14) என்ற மகனும் இருந்தனர். கடந்த 16 நாட்களுக்கு முன் அம்சா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VXJNzfD

Post a Comment

0 Comments