
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையம் வந்த, நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடிபணத்துடன் 3 பேர் பிடிபட்டனர்.
பிடிபட்ட நபர்கள், தமிழக பாஜகசட்டப்பேரவை கட்சித் தலைவரும், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. அந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக எடுத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதை அவர் மறுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EI9upxY
0 Comments