
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி என்ற தட்சணா (48). இவர் டி.பி.சத்திரம் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளார். மேலும், இவர் மீது 5 கொலை, 3 கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த தட்சிணாமூர்த்தியை அரும்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sWX1ho7
0 Comments