
கோவை: கோவையிலிருந்து சென்னைக்கு புறப்பட இருந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகளை வெளியே வரவழைத்து, விமானத்தை போலீஸார் சோதனையிட்டனர்.
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை செல்வதற்காக விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர், விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டுச் சீட்டை விமான ஊழியர்கள் பார்த்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vgr3xP8
0 Comments