
தாம்பரம்: கிழக்கு தாம்பரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 49 வயதுள்ள ஒருவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக மனைவிபிரிந்து சென்று விட்டதால் மகளுடன் தங்கி இருந்தார்.
மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகளுக்கும் தனது தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் அவரும் தந்தையை விட்டு பிரிந்து பாட்டி வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மென்பொருள் நிறுவன ஊழியர் கடந்த ஐந்து மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fNS78Mq
0 Comments