
கரூர்: அரவக்குறிச்சியில் வாகன சோதனையின்போது, பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் போலீஸார் மீது பெப்பர்ஸ்பிரே அடித்துவிட்டு தப்பமுயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் நேற்றுமுன்தினம் அதிகாலை அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி, விசாரணை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yZYUduW
0 Comments