Crime

சென்னை: மும்பை போலீஸ் என மிரட்டி வெளிநாட்டு கும்பல் கோடிக்கணக்கில் பணம் பறிப்பதாகவும், அவர்களுக்கு முகவர்களாக செயல்பட சென்னை இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாகவும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

செல்போன் அழைப்பு: சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் 72 வயதுடைய ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் என்னுடைய செல்போன் இணைப்பு 2 மணி நேரத்தில் துண்டிக்கப்படும் என்றும், மேலும் தகவலுக்கு எண் 9-ஐ அழுத்துமாறும் பதிவு செய்யப்பட்ட குரலில் சொல்லப்பட்டது.என்னுடைய செல்போன் எண், ஆதார், வங்கி கணக்கு, கியாஸ் சிலிண்டர் இணைப்பு, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த எண் துண்டிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் எண் 9-ஐ அழுத்தினேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xtZikwr

Post a Comment

0 Comments