Crime

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற சிறுமி அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், இது குறித்து சிறுமியின் பெற்றோர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், சிறுமியை ஊட்டி, பெங்களூரு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zGwYmCv

Post a Comment

0 Comments