
ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சக்சேனா (42). இவர் அங்குள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேல் அதிகாரிகள் வேலை சார்ந்துகடும் நெருக்கடி கொடுப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டு 45 நாட்களாக தூக்கிமின்றி தவிப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தன் தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தருண் சக்சேனா வின் மனைவி மேகா, தன்னுடைய கணவரின் தற்கொலைக்கு, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளே காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அந்நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் பிரபாகர் மிஸ்ரா மற்றும் தேசிய மேலாளர் வைபவ் சக்சேனா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q6Bcpjn
0 Comments