Crime

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னைபெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரபல ரவுடி சம்போசெந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இவர்கள் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் பதுங்கி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் தேடுதல் வியூகம் அமைத்து தனிப்படை போலீஸார் விரைவில் வெளிநாடு விரைய உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Qw8xBrc

Post a Comment

0 Comments