Crime

மாங்காடு: மாங்காட்டை அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் பகுதியில் சிறிய வீட்டில் வட மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் அவரது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ரிஸ்வான் அவரது அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீயை அணைக்க முடியாததால் வெளியே வந்தனர். சத்தம் கேட்டதும் வீட்டின் உரிமையாளர் குமார் மற்றும் எதிர் வீட்டில் வசிக்க கூடியவர்கள், அவரது உறவினர்கள் என அனைவரும் அங்கு ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அதிக அளவில் காஸ் கசிவு ஏற்பட்டு, சிலிண்டர் திடீரென வெடித்து, அறை முழுவதும் தீ பரவியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fhbINvj

Post a Comment

0 Comments