Crime

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் அறிவழகன் (23). தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகக் கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அறிவழகன் பணியைமுடித்துவிட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். மணலூர் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, எதிர்பாராதவகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டிலிருந்து சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அறிவழகன், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஒட்டி வந்தசரண்ராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C4ujfO7

Post a Comment

0 Comments