
சிவகங்கை: சிவகங்கை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 மென் பொறியாளர்களுடன் வளர்ப்பு நாயும் உயிரிழந்தது. மேலும் ஒருவர் காயமடைந்தார்.
சிவகங்கை பையூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (33), கலாநிதி (33), யோகேஸ்வரன் (29). இதில் கார்த்திக் சென்னையிலும், கலாநிதி கோயம்புத்தூரிலும் மென் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்நிலையில், இருவரும் யோகேஸ்வரனுடன் காரில்காளையார்கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சிவகங்கைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MjN8YXx
0 Comments