Crime

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறைக்குள் மோதல் ஏற்பட்டு தண்டனை கைதியை, விசாரணை கைதிகள் 10 பேர் சேர்ந்து கற்களால் தாக்கியுள்ளனர். இதில் அந்தக் கைதிக்கு காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என 325 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தண்டனை கைதிகளான மர்டர் மணிகண்டன், தமிழ் மணி ஆகியோருக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது‌. இதையடுத்து இருவரையும் சிறை வார்டன் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மணியை, இன்று விசாரணை கைதிகள் 10 பேர் ஒன்று திறண்டு கற்களால் சராமாரியாக தாக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4JyN0FP

Post a Comment

0 Comments