
திருச்சி: திருச்சியில் மத்திய சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு இன்று உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
திருச்சி முத்தரசநல்லூர் அருகிலுள்ள பளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திராவிட மணி (40). இவர் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செப்.27-ம் தேதி திராவிட மணியை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6NokQcx
0 Comments