
நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோலவழியில் உள்ள 3 ஏடிஎம்களில் நேற்று முன்தினம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா கொள்ளை கும்பல் வந்த கன்டெய்னர் லாரி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிடிபட்டது.
அப்போது லாரியில் இருந்தவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பமுயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் அந்துரோல் கிராமத்தைச் சேர்ந்த ஜூமாந்தின் (37) உயிரிழந்தார். கப்லா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹஸ்ரு (எ) ஹஜர் அலி (30) காயமடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JYlifu1
0 Comments