
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே லாரியில் கோழி தீவனம் எனக்கூறி கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விருதுநகர் மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா உத்தரவின்படி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் தன்ராஜ் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் அப்பாதுரை, கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று இரவு மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f2rKpW8
0 Comments