
சென்னை: மது போதையில் தகராறு செய்து மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பிரபல பின்னணி பாடகர் மனோ மகன்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், மதுரவாயல் ஜானகி நகரைச் சேர்ந்த நிதிஷ் என்ற ஐடிஐ மாணவரும் வளசரவாக்கம் தேவி குப்பத்தில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pUv2IzM
0 Comments