
பெரம்பலூர்: சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர்கள் 2 பேருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக திருச்சியைச் சேர்ந்த மரியம்பிச்சை பொறுப்பேற்றார். அதன்பின், 23.05.2011 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஆனந்தன் (27) என்பவர் ஓட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kpDZVbS
0 Comments