
பாட்னா: பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டம்,கங்காபூரில் தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. கடந்த 11-ம் தேதி இரவு மருத்துவர் சஞ்சய்குமார் சஞ்சு பணியில் இருந்துள்ளார். அன்றிரவு அவரும், 2 நண்பர்களும் சேர்ந்து மருத்துவமனையில் மது அருந்தி உள்ளனர்.
பின்னர் இரவு பணியில் இருந்த நர்ஸை, மருத்துவர் சஞ்சய் குமார் தனது அறைக்கு வரவழைத்து உள்ளார். அப்போது டாக்டரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நர்ஸை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க டாக்டரின் பிறப்பு உறுப்பை நர்ஸ் பிளேடால் வெட்டினார். இதில் மருத்துவர் நிலைகுலைந்தார். அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட நர்ஸ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V1LshNR
0 Comments