
செங்குன்றம்: சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் பிரிவில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்களான மோனிகா (32), கிளாரக்கா (33) ஆகிய இருவரும் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.
மோனிகாவும், கிளாரக்காவும் புழல் சிறையின் விசாரணைப் பிரிவில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சூழலில், நேற்று முன்தினம் பார்வையாளர் சந்திப்பு நேரத்தில், சிறைத் துறை அனுமதியுடன் விசாரணைப் பிரிவில் உள்ள நைஜீரிய காதலருடன் கிளாரக்கா வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியுள்ளார். பிறகு அவர் அறைக்கு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CeRYx3Z
0 Comments