
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
சாத்தூர் அருகே குகன்பாறையில், சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்றும் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FeRYXHT
0 Comments