
பொன்மார்: பொன்மார் அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் பாதிரியர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கொலையில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான பாதிரியாருக்கு போதை மாத்திரை விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள பொன்மார் பகுதியில் உள்ள மலைத் தெருவில் குடியேறினர். விமல்ராஜ் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GpMO8Cq
0 Comments