
பூந்தமல்லி: போரூர் சுங்கச் சாவடி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட தலைமைக் காவலர் ரேஸ் பைக் மோதி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள எஸ்.ஆர்.எம்.சி. (போரூர்) காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
குமரன் நேற்று மதியம் இரும்புலியூர்-புழல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரத்திலிருந்து புழல் பகுதியை நோக்கி, அதிவேகமாக வந்த ரேஸ் பைக் குமரன் மீது வேகமாக மோதியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xr2s6H9
0 Comments