Crime

சென்னை: அஸ்வத்தாமன் கைதான நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை மேலும் தீவிரம் அடைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக தலைமறைவாக உள்ள பிரபல தாதா சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nNtlsxY

Post a Comment

0 Comments