
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலி பயிற்சி முகாம் நடத்தி, 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு ரூ.36 லட்சம் பணம் பறித்ததாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 12 வயதுடைய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி என்சிசி பயிற்சியாளருமான சிவராமன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு ரூ.36 லட்சம் மோசடி செய்துள்ளதாக, ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று (ஆக.21) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EpsP4QZ
0 Comments