Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, நாள் தோறும் சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வழக்கம்போல், முகவர்களுக்கு பால் அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்பணியில், தரம் பிரித்து, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் நிரப்பப்பட்ட பால் இயந்திரத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட்டில் வெளியே வரும் போது, அதனை டப்பில் அடுக்கும் பணியில், தற்காலிக ஊழியரான உமாராணி ( 30) ஈடுபட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eHrE8Ts

Post a Comment

0 Comments