
தேனி: தேனி அருகே கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதோடு கடிதம் ஒன்றையும் எழுதிவைத்ததாக தெரிகிறது.
தேனி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (35).இவரது மனைவி அஜிதா (33).மகள் பிரித்விகா (5).அஜிதா தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். இவர்கள் தேனி அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.சதீஷ்குமார் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.மேலும் தனியாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த இரண்டு மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஏதோ ஒரு மன வருத்தத்தில் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tjGTUCW
0 Comments