Crime

சென்னை: சென்னை டிபி சத்திரம் பகுதியில் போலீஸாரை பீர் பாட்டிலால் தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை செம்மஞ்சேரி சேர்ந்தவர் ரோகித் ராஜ். இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூன்று வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இவர் மீது அமைந்தகரை, டிபி சத்திரம், அசோக் நகர் ஆகிய மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு இருந்தன. போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி ரோகித் ராஜ் டிபி சத்திரம் சிமெட்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக சேத்துப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5ckCL4U

Post a Comment

0 Comments