
படூர்: கேளம்பாக்கம் அருகே படூர் புறவழிச்சாலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்ற காரின் குறுக்கே நாய் வந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 01) மாலை 3.30 மணிக்கு கல்லூரி முடிந்ததும் 4ஆம் ஆண்டு படிக்கும் மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்திற்கு சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JB8A4ck
0 Comments