
வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன ஆண் குழந்தையை திருடிச்சென்ற பெண் குறித்து காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். ஆண் குழந்தை திருடப்பட்ட புகாரை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்த காவலாளியை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். இவரது மனைவி சின்னு. கர்ப்பிணியாக இருந்த சின்னு, பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், பிரசவ வார்டில் இருந்து குழந்தைகள் நல வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தாய், சேய் இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5LDfas3
0 Comments