Crime

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரதுவீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்துராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக மேலும் 5 பேரை கைது செய்தனர். இதனால், கைது எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். பல்வேறு ரவுடிகுழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல், இக்கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aGcsevP

Post a Comment

0 Comments