Crime

சென்னை: முதல்வர் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இந்த வீட்டை சுற்றி, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக செல்வோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xeA860z

Post a Comment

0 Comments