Crime

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கிய ரூ.70 கோடி மதிப்பு போதைப் பொருள் வழக்கில்கைதான சையது இப்ராஹிம் திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருக்கும் ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநர் பி.அரவிந்தன் தலைமையிலான போலீஸார் கடந்த 24-ம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்துவிசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 5.970 கிலோ கிராம் எடைகொண்ட போதைப் பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், அதை வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசுல் ரஹ்மானை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yRWLivT

Post a Comment

0 Comments