Crime

ரியாசி: ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கடந்த ஜூன் 9-ம் தேதி, கோயிலுக்கு சென்று திரும்பிய பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்ததாக, கடந்த ஜூன் 20-ம் தேதி, உள்ளூரைச் சேர்ந்த ஆடு வியாபாரி ஹகம் தீன் என்பவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WAQbg9V

Post a Comment

0 Comments