Crime

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வேன் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (17), ஆதிசீனிவாசன் (22), ரோஹித் (18) மற்றும் ஈரோடு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்த தர்மேஷ் (19) ஆகியோர், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கிப் பயின்று வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தாளவாடி அருகேயுள்ள ஆசனூர் செல்லத் திட்டமிட்டனர். இதையடுத்து, கருங்கல் பாளையத்திலிருந்து ஸ்ரீநிவாஸ் அண்ணன் முகில் நிவாஸ் (22) காரில் கல்லூரிக்கு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Iowu5yY

Post a Comment

0 Comments