
சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து கிரிக்கெட்வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை நிலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் வழியாக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், பாலத்தின் மேற்பரப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, பாலத்திலிருந்து திடீரென கீழே குதித்தார். சுமார் 30 அடி உயரத்திலிருந்து குதித்ததால் பலத்த காயமடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zr8RpxJ
0 Comments