
சென்னை: முன் விரோதத்தில் எதிர்தரப்பு மாணவர்களை தாக்க, கத்தியுடன் சாலையில் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனை ராஜாஜிசாலை, கடற்கரை ரயில் நிலையபேருந்து நிறுத்தத்தில் இளைஞர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்து, கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள் 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1CBkPLv
0 Comments