
சென்னை: இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் கும்பல் ஒன்று ரூ.10 லட்சம்பணத்துடன் கோயம்பேடு பேருந்து முனையம் பகுதியில் சுற்றித் திரிவதாக சிஎம்பிடி காவல் நிலையபோலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்காவல் நிலைய போலீஸார் அங்குரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.
அப்போது, அங்கு 2 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில் 500 ரூபாய் பண்டல்கள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/neCra3k
0 Comments