
ராமநாதபுரம்: பரமக்குடியில் ரூ.52.92 லட்சம் ஹவாலா பணத்தை கைப்பற்றி, அதை கடத்தி வந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காந்தி நகர் காவல் சோதனைச் சாவடியில் இன்று காலை மதுவிலக்கு போலீஸ்காரர்கள் ராஜீவ்காந்தி, முத்துமணி ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சோதனைச்சாவடி அருகே இருவர் சந்தேகப்படும் வகையில் இரு பைகளை கைமாற்றி உள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு போலீஸார், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரைச் சேர்ந்த பிரபாகரன்(27), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் (30) எனத் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு பைகளில் இருந்த ரூ.52 லட்சத்து 92 ஆயிரத்து 200-ஐ பறிமுதல் செய்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/or0SPcW
0 Comments