
சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி அப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் வேலூர், காட்பாடி, திருவலம் இ.பி சந்திப்பு அருகில் பெங்களூரு நோக்கி சென்ற டாரஸ் லாரியையும் அதைத் தொடர்ந்து லாரிக்கு துணையாக வந்த காரையும் மடக்கி நிறுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TRpcyef
0 Comments