
கடலூர்: சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்து விற்றதில் முக்கிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் கடந்த 17 ஆம் தேதி கோவிலாபூண்டி- மீதிகுடி கிராமப் பகுதி சாலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரளா மற்றும் கர்நாடகா பல்கலைக்கழகத்தின் போலிச் சான்றிதழ்கள் கிடந்தன. இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் கிள்ளை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி சாலையில் கிடந்த போலிச் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gPTroax
0 Comments