
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், ஆதீனத்தின் உதவியாளராக இருந்த செந்தில் தனிப்படை போலீஸாரால் வாராணசியில் கைது செய்யப்பட்டார்.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்பான ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், ஆடுதுறை வினோத், மடாதிபதியின் நேர்முக உதவியாளர் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செந்தில், திருவெண்காடு சம்பாகட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 9 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QW7CM5G
0 Comments