
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை கோடப்பமந்து கால்வாயில் விழுந்த வட மாநில இளைஞர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை பின்புறம் கோடப்பமந்து கால்வாய் ஓடுகிறது. இன்று மதியம் வட மாநில இளைஞர் ஒருவர் திடீரென இந்தக் கால்வாயில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கால்வாயில் குதித்த அவர் சகதியில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அப்பகுதியில் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சகதிக்குள் சிக்கிக்கொண்ட அவரை மீட்க யாரும் முன்வராத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி என்பவர் தனி ஆளாக கால்வாயில் இறங்கி அந்த இளைஞரை மீட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DTHRXMo
0 Comments